Monday, January 12, 2009

தமிழே இசையைத் தான்தாங்கு!

(01)
தமிழே இசையைத் தான்தாங்கு!

எடுப்பு
தங்கத் தமிழே எனைத்தாங்கு-நீ
தானே இசையின் உயிர்ப்பாங்கு -தங்கத்
தொடுப்பு

முங்கிப் பொழியும் மொழியின் வெள்ளம்-நீ
முத்துப் புலவர் தாயின் உள்ளம் -தங்கத்

முடிப்பு

எங்கும் ஏற்றும் ஒளியின் சிதறல்-தமிழ்
இசைகள் கோர்த்த மணியின் கதிர்கள்
பொங்கு தமிழிற் பூக்கும் அருவி-இசைப்
புயலாய் மருவும் தென்றற் புரவி -தங்கத்

ஆசைக் கருக்கள் தேசக் குயில்கள்-பண்
ஆகிக் களித்து ஆடும் மயில்கள்
ஈசன் பாதம் இசையின் கீதம்-இந்த
இரண்டும் இணைக்கும் மொழியின் நாதம் -தங்கத்

புதியபாரதி.

(இசை ஏற்றபவர்கள் எழுதியவரையும் குறியுங்கள்)

No comments:

Post a Comment