Thursday, January 22, 2009

சினிமாவுக்கு எழுதச் சொன்னால்..


(01)

வாடிவாடி வடிவழகி!

வாடி வாடி வடிவழகி
வாய்த்த காதல் எழிலரசி
ஆடி ஆடும் நடையழகி
ஆலங் குயிலின் குரலழகி.. வாடி வாடி..

போட போடா புழுகாதே
புன்ன கைக்கும் அழகோனே
கூடல் ராமன் வீதிவந்து
கோலம் காட்டும் எழிலோனே! -போடபோடா

சாலையோரம் நீநடந்தால்
சந்தியெல்லாம் இறுகுதடி
வாலைக்குமரி வள்ளிபுலம்
வருகிறாயே பூங்குமரி.. -வாடி வாடி..

ஏறுபோலே நீநடந்தால்
இலவம்பஞ்சு மனம்பறக்கும்
ஆறுபோலே நீநடந்தால்
அகிலமெல்லாம் தூள்பறக்கும்.. -போடபோடா

மாதவியாள் போலவில்லை
மதுரைத்தீயின் கண்ணகியே
சோதனையில் தீக்குளிக்கும்
தேசமங்கை ஆரணங்கே.. வாடிவாடி

இருவரும்:
காதலிலே மூழ்கிநிற்போம்
காலமெல்லாம் தமிழினிப்போம்
சாதனையே காட்டிநிற்போம்
சரித்திரமாய் நிலைத்துநிற்போம்.. வாடிவாடி..போடபோடா

புதியபாரதியின் பாடலிது

No comments:

Post a Comment